song – visit temple – temple is pure heart

பல்லவி

கோயில் வாசல் வருவேனோ? – உன் திருக்

கோயில் வாசல் வருவேனோ?

அனுபல்லவி

தாயின் சொல் கேளாய் பிள்ளையாய் வளர்ந்தேன்

நோய் நொடி தாக்கி மூப்பு வரும் முன்னே – கோயில் வாசல்

வருவேனோ?

சரணம்

வாயில் வந்து நின்றால் போதும் நாயேன் வாழ்வு கடைத்தேறும்

போயும் போயும் இந்த இழி பிறவி வேண்டவே வேண்டாம். – இனி

சாயும் இவ்வுடல் கொண்டு சதானந்தன் அடி பணிந்து

தீயில் வேகும் வரை நின் நினைப்பொன்றே போதும் போதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *