இசை – இசைக் கட்டுரைகள்

வணக்கம்.

இசைக் கட்டுரை – 1 – இசையின் பெருமை

1. இசை என்ற சொல்லுக்கு  பல பொருள் இருந்தாலும், பாட்டு, இசைதல், புகழ் என்ற பொருளே பெரும்பாலும் எடுத்தாளப்படுகிறது.

2. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை.

3. இறைவன் நாத மயமான காரணத்தினால் நாதன் என்று போற்றப்படுகிறான்.

4. இறைவன் இசைக் கருவிகளுடன் காட்சி தருகிறான்.

5. இசையால் இறைவனை மட்டுமின்றி, உயிர்கள் அனைத்தயும் வசமாக்க இயலும்.

6. ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் இசை அவனுடன் பயணிக்கிறது.

7. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் இசையுடன் வாழ்கிறான்.

Lullabies... come back ...? || தாலாட்டு ...

8. தாலாட்டு கேட்டு வளரும் குழந்தை, பள்ளியில் இசையுடனே பாடங்களை பயில்கிறது.

9. வேலை வாய்ப்பின் போதும் இசை அம்மனிதனுடன் இருக்கிறது.

10. நல்ல வேலை கிடைத்தபின் கல்யாணம். மனம் நிறைந்த மனைவி கிடைக்கும் போது, இசை, காலை,  மாலை  என மனம் மகிழ்ந்த தருணமெல்லாம் மங்கள் இசை.

11. மனைவி வந்த பிறகு மற்றென்ன? ஆம். மிகச் சரி. குழந்தை. மீண்டும் தாலாட்டு.

12. தந்தையானவன் காலப்போக்கில் தாத்தாவாகிறான். அவனின் வயதுக்கால இசையை கேட்க விரும்புகிறான்.

13. தள்ளாடி தள்ளாடி ஒரு நாள் மீண்டும் மாண்டு விடுகிறான்.  அப்போது அவனுக்கு சொந்த பந்தங்கள் இசை வழி கொண்டு செல்கின்றனர்.

14. இவ்வாறு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசை மனிதனின் மனசாட்சி போல் அவனுடன் வாழ்கிறது.

15. இசையின் மூலம் விலங்குகளை வசமாக்கலாம்.

16. இசை கேட்டு பயிர்கள் நன்கு வளர்வதாக ஆராய்சிகள் கூறுகின்றன.

17. இசை மூலம் நோய்களை குணமாக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *