நாலாயிர திவ்யப் பிரபந்தம் – கண்ணும் கமலம்

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

 

கண்ணும் கமலம், கமலமே கைத்தலமும்,

மண் அளந்த பாதமும் மற்று அவையே, எண்ணில்

கருமாமுகில் வண்ணன், கார்க் கடல் நீர் வண்ணன்,

திருமாமணி வண்ணன் தேசு.                                   2290

 

       கரிய வானின் வடிவுடையவன், நீர் வண்ணன், பெரு விலையாய் எழில் ததும்பும் எம்பெருமான் அழகை நினைக்கப் புகுந்தால், திருக்கண்கள் தாமரைப்பூ, திருக்கைகளோ அத்தாமரை மலர், உலகளந்த திருவடிகளும் அந்தச் செந்தாமரையே.

கதிரவன்

கதிரவன்

எடுப்பு

காலை எழுந்தவுடன் கதிரவனை வணங்கு

தொடுப்பு

மாலை முழுதும் நீ நல்லபடி ஆடு

உடலும் உயிரும் மனமும் எப்போதும் புத்துணர்வு பெற்றிருக்க வேண்டும்

முடிப்பு

கலை பல கற்றுக் கொள்க விலை போகாமல் இருக்க

தலையினில் கர்வம் வேண்டாம் மலை போன்ற புகழும் சேரும் வாழ்க எந்நாளும்

Prof. V.V. Meenakshi Jayakumar

போற்றி ஓம் நமச்சிவாய

போற்றி ஓம் நமச்சிவாய

 Shiva

போற்றி ஓம் நமச்சிவாய

புயங்கனே மயங்கு கின்றேன்

போற்றி ஓம் நமச்சிவாய

புகல் இடம் பிறிது ஒன்று இல்லை

போற்றி ஓம் நமச்சிவாய

புரம் எனைப் போக்கல் கண்டாய்

போற்றி ஓம் நமச்சிவாய

சய சய போற்றி போற்றி

ஒருவனே போற்றி ஒப்பு இல் அப்பனே போற்றி

குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி

வருக என்று என்னை நின் பால்

வாங்கிட வேண்டும் போற்றி

தருக நின் பாதம் போற்றி

தமியனேன் தனிமை தீர்ந்து

Prof. V. V. Meenakshi Jayakumar

Music

Namaste.

Stages of Realization;

Swami Vivekananda says:

After long searches here and there, in temples and in churches, on earth and in heaven, at last you come back to your own soul, completing the circle from where you started, and find that He whom you have been seeking all over the world, for whom you have been weeping and praying in churches and in temples, on whom you were looking as the mystery of all mysteries, shrouded in the clouds, is the nearest of the near, is your own Self, the reality of your life, body and soul.

இராமகிருஷ்ணர் - தமிழ் விக்கிப்பீடியா

His Guru Sri Ramakrishna Paramahamsa says:

Nishtha leads to bhakti, when mature, becomes bhava; bhava, when concentrated becomes mahabhava; and last of all is prema.  Prema is like a cord; by Prema God is bound to be devotee; He can no longer run away. An Ordinary man can at best achieve bhava.

உன்னை அறிய விரும்புகிறேன் — நான்

என்னை அறிய விரும்புகிறேன்.

நானே நீயாக விரும்புகிறேன் – நான்

நீயே நானாக விரும்புகிறேன்.

எங்கு இருக்கிறாய் இறைவா – எங்கு இருக்கிறாய்

அங்கு வர விரும்புகிறேன்

ஆசை தொலைத்து விட்டேன் – பாசம்

தொலைத்து விட்டேன்

பூசை முடித்து விட்டேன் – பணம்

காசை மறந்து விட்டேன்.

தேடி தேடி நான் அலைந்தேன் –

தேவன் உன்னைக் காண

தேடிக் கண்டு கொண்டேன்

தேவன் நீ வாழும் இடம்.

வெகு தூரத்தில் நீ இல்லை.

வெகு வெகு அருகில் நீ உள்ளாய்

ஆம்.. என் மனதில் மனசாட்சியாய்

எப்போதும் நீ உள்ளாய்

நீ வேறு நான் வேறல்ல – நான் கண்டுகொண்டேன்

நான் வேறு நீ வேறல்ல

…. Prof. V.Meenakshi Jayakumar