நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாய் அவனை

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த

முதல் திருவந்தாதி

வாய் அவனை அல்லது வாழ்த்தாது. கை உலகம்

தாயவனை அல்லது தாம் தொழா, பேய் முலை நஞ்சு

ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்

காணா கண், கேளா செவி.                                                   2092

 

எனது வாய் இவனை அன்றி வாழ்த்தாது. தாவி உலகளந்த திருவடிகளையன்றி என் கைகள் தொழமாட்டா. பேயின் முலையில் நஞ்சை உணவாக உண்ட இவன் திருமேனியையன்றிக் கண்கள் காணமாட்டா. இவன் பேர்களையன்றிச் செவிகள் கேட்கமாட்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *