Saint Arunagirinathar composed Kandhar Anubhoothi which explains the greatness of Lord Murugan and Prof Dr. V V Meenakshi Jayakumar explains the same in simple tamil.
Author: vmeenakshi jayakumar
முருகன் பாட்டு
மருதமலை மேல் இருக்கும் முருகனைப் பாடு
மனசெல்லாம் நிறைந்திருக்கும் முருகனைப் பாடு
மருதமலை சென்று வந்தால் இனி இல்லை கேடு
முருகனின் பாதத்தை மனமே இனி நாடு
ஆறுபடை கோவில்கள் அவனது வீடு
அவற்றை மட்டும் தேடியே அணுகியே ஒரு
அள்ளித்தரும் தெய்வம் அவனுக்கு இல்லை ஈடு
முருகனின் சன்னிதியில் ஆனந்தம் தேடு
தலைஎழுத்தை மாற்றிவிடும் திருப்புகழ் ஏடு
ஒருநாள் கட்டாயம் செல்வோம் உடல் சுடும் காடு
அதற்குள் ஒரு நாளவது அலகு போடு
அன்பவர்கள் மத்தியில் அனைவரும் கூடு
—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
திருச்சந்த விருத்தம்
பல்லவி
திருச்சந்த விருத்தம் தந்த
திருமழிசைபிரான் வாழியே – திருச்சந்த விருத்தம்
அனுபல்லவி
திருமால் கொண்டது பல கோலம் – அதில்
திருசயனம் பற்றிய பாடல்கள் பலஉள்ள – திருச்சந்த விருத்தம்
சரணம்
பக்தி பாசனம் செய்யச் சொன்னார் – இவர்
முக்தி பெற வழி இதுவே அன்றே சொன்னார்.
சக்தி பெற வேண்டுமெனில் திருமால் பாதம்கதி
உக்தி இதுவே பிரபந்தங்களின் வழிநின்று – திருச்சந்த விருத்தம்
—-பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
பெருமாள்
பல்லவி
பள்ளி கொண்ட பெருமான் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
– பள்ளி கொண்ட
அனுபல்லவி
துள்ளி வரும் காவேரி கரையில்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
வள்ளி முருகனின் மாமன் அவர்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
சரணம்
ஆழ்வார்கள் பாடிய அருள் அரங்கன்
பாழ்வான வாழ்வு மாற அருள் அரங்கன்
தாழ்வான நிலை மாறும் அவன் அருள் சுரந்தால்
வாழ்வான வாழ்வு வாழ பிரபந்தம் பாடுவோம்
—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
நாலாயிரம்
பல்லவி
நாலாயிரம் நம் சொத்து
நாலாயிரம் நம் சொத்து
– நாலாயிரம் நம் சொத்து
அனுபல்லவி
பாலாயிரம் வேண்டாம்
நாலாயிரம் போதும்
மாலாயிரம் நாமம் தரும்
நாலாயிரம் போதும்
– நாலாயிரம் நம் சொத்து
சரணம்
அன்புடன் இராமானுஜர் நமக்கு தந்த சொத்து
ஆர்வமுடன் சேவித்தால் நமக்கு இல்லை பத்து
இகபர சுகத்திற்கெல்லாம் பிரபந்தம் ஒன்றே வித்து
ஈசனவன் பாடும் நாலாயிரம் நாம் அணிகின்ற முத்து
—-பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
விநாயகார் பாட்டு
பல்லவி
வரணும் வரணும் விநாயகா
சரணம் சரணம் விநாயகா
அருள வரணும் விநாயகா
பரம கருணை வடிவானவா
அனுபல்லவி
வந்தி பிட்டுக்கு சென்ற தந்தையின் வரபுதல்வா நீ
குந்தி வீட்டுக்கு சென்ற கண்ணனின் மனம் நிறைந்தவா
– வரணும் வரணும்
சரணம்
குழந்தைகளின் தெய்வம் நீயே
பெரியோர்களின் தெய்வம் நீயே
தேவர்களின் தெய்வம் நீயே
விஜய் மீனாட்சியின் தெய்வம் நீயே
– வரணும் வரணும்
—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி
கண்ணன் பாட்டு
பல்லவி
எம்பிரான் கண்ணனயே என் மனம் பாடுமே
எம்குறை தீர்ப்பவனின் பதத்தையே பாடுமே
-எம்பிரான்
அனுபல்லவி
தம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டவன் கண்ணன்
அம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டன் கண்ணன்
சரணம்
அம்பரமும் தண்ணீரும் அவனது படைப்பு
அதில் ஒட்டாமல் வாழ்வது அவனது சிறப்பு
அனைத்திற்கும் ஆதாரம் அவன் அதிலேது மறுப்பு?
அவன் அருள் பாடுகிறேன் இதிலென்ன வியப்பு?
– எம்பிரான்
—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
கண்ணன் பாட்டு
பல்லவி
ஆலிலைமேல் பள்ளி கொண்டாய் கண்ணா கண்ணா
-நீ ஆலிலைமேல் என்மன
அனுபல்லவி
என் மனத் துளியிலே பள்ளி கொள்ள வருவாய் கண்ணா கண்ணா
மாலியாக வருவாயே என் கண்மணி கண்ணா
சரணம்
உன் கையில் புல்லாங்குழல் என் மனம் ஆகவே
உள்ஒன்றும் இல்லாமல் இருப்பது சுகமே
புள்ளின் மேல் வருவாய் என் குறை தீர்ப்பாய்
என் கருத்திலும் கண்ணிலும் நிறைந்தவன் நீ தானே
– ஆலிலைமேல்
—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
முருகன் பாட்டு
பல்லவி
மனமே மனமே அமைதி கொள்வாய்
மனத்துக்கினிய மருத்துவன் முருகன் உள்ளான்
-மனமே மனமே
அனுபல்லவி
தினமே தினமே அவன் புகழ் பாடு
தினகரனாய் வருவான் நம் பிழை பொறுப்பான்
– மனமே மனமே
சரணம்
முருகன் குமரன் குகன் என்று பாடு
வருவான் மயில் மேல் நம் குறை தீர்க்க
அருளும் தருவான் அன்பும் தருவான்
இருளும் களையும் ஒளியுடன் வாழ
– மனமே மனமே
–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்
முருகன் பாட்டு
பல்லவி
கந்தனே உனை நான் அழைக்கின்றேன்
சுந்தரனே நீ உடனே வா வா வா
– அழகு
அனுபல்லவி
சந்ததமும் நான் தொழுகின்றேன் – உனை
வந்தனை செய்தே நான் வாழ்கின்றேன்
– அழகு
சரணம்
ஆனைமுகன் சோதரனே அழகு தெய்வமே
ஊனை உருக்கும் தமிழ் இசை நாயகனே
ஏனைய தெய்வங்கள் இருந்தாலும் – சுட்ட
பானைபோல் வினையை நீக்கிடும் – அப்பா
– அழகு
–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்