Tag: guru
வேலவா
வேலவா
பன்னிருகை வடிவேலா பறந்தோடி நீயே வா வா
என்னிருகையால் தொழுதேன் உடனே நீ வா வா வா
அன்னத்தில் மேல் அமர்ந்த பிரமனிடம்
உன்னத ஓங்கார பொருள் கேட்பாய்
கன்னத்தில் கைவைத்தவர் தெரியாது என்ற போது
சன்னல் மட்டுமே கொண்ட ஒரு சிறையில் தான் அடைந்தாய்
உலகில் உற்பத்தி உடனே நின்ற போது
அலகில் ஜோதியான அம்பலவாணர் வந்து
தலமான சுவாமிமலையில் சீடனாக அமர்ந்து கேட்டார்
பல்வேறு குரு இருந்தாலும் தகப்பன்சாமி நீயே ஆனாய்
Prof. V. V. Meenakshi Jayakumar
போற்றி ஓம் நமச்சிவாய
போற்றி ஓம் நமச்சிவாய

போற்றி ஓம் நமச்சிவாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றி ஓம் நமச்சிவாய
புகல் இடம் பிறிது ஒன்று இல்லை
போற்றி ஓம் நமச்சிவாய
புரம் எனைப் போக்கல் கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய
சய சய போற்றி போற்றி
ஒருவனே போற்றி ஒப்பு இல் அப்பனே போற்றி
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருக என்று என்னை நின் பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்ந்து
Prof. V. V. Meenakshi Jayakumar
Mangalam Ramar, Guru, Sivan and Hanuman
பல்லவி
மங்களம் மங்களம் சங்கர குருவிற்கு மங்களம்
செய மங்களம் சுப மங்களம் ஜெய மங்களம் என்றும் சுப மங்களம்
அனுபல்லவி
தங்கும் இன்பம் பேரின்பமாக
எங்கும் இனிமேல் மங்களம்
பங்கில் உமையை கொண்ட பரமன்
எங்கள் குறைதீர்க்க குருவாய் வந்தார் – மங்களம்
சரணம்
வீங்கிய தாடை உடைய அனுமன்
பாங்கிய அழகில் நின்ற அனுமன்
ஓங்கிய புகழை கொண்ட அனுமன்
தூங்கும் ஆன்மாவை எழுப்பும் அனுமன் – மங்களம்
- Prof.V.V.Meenakshi Jayakumar
Guru My Guru
பல்லவி
குருபக்தி செய்வாய் மனமே – தினமே
குருபக்தி செய்வாய் மனமே – குருபக்தி
அனுபல்லவி
குருபக்தி செய்ய செய்ய வினை அகற்றிடும்
குருபக்தி செய்ய செய்ய வினை கழிந்திடும் – குருபக்தி
சரணம்
உருவம் கொண்டு வந்த இறைவனே குரு அவர்
மருமாசு ஏதுமின்றி குருவைச் சரணடை
கருவினைத் தோன்றாமல் காக்கும் கண்கண்ட தெய்வம்
இருவினைத் தீர்த்து இறைவன் தான் சேர்க்கும் எனவே
Prof. V.V.Meenakshi Jayakumar
Guru Bhakthi
பல்லவி
மனமே மனமே குருபக்தி செய்
மயக்கம் தீர்க்கும் குருசரண் அடை – மனமே
அனுபல்லவி
சினமே தவிர்த்து தவமே தான் புரி
இனமே புரியாத இன்பநிலை அடை – மனமே
சரணம்
மாநிலத்தில் இருந்து குருபக்தி இல்லாமல்
மாதவம் செய்தாலும் பயன் ஏதும் இல்லை.
காமியத்தில் அமிழ்ந்து இளைக்காமல் காத்திடுவார்
சாமியாகி வந்து நம்மை கரையே ஏற வைப்பார் எனவே
Prof. V.V.Meenakshi Jayakumar
question and answer – Music
Question and answers:
1.The name given for swaras sung with deflection or oscillation—- Gamaka
2.Dhanashri raga belongs to which catagory —– Audava Sampoorna
3. Name the invocatory song in Harikatha Kalakshepam — Panchapadi
4. Name the Guru of Sri Purandara dasa—– Vyaasaraya theertha
5. The name given for the dissonant svara in music—- Vivaadi
6.The actual name of Bhadrachala Ramadasa — Gopanna
7. The term Pann is given for — Raga
8. The term Paani is given for —– Tala
9. The janya ragas that take only notes of its parent mela are called — Upanga Raga
10. Name of the Prabhandas composed by Annamacharya..— Sringara Manjari.
Swami Dakshinamoorthy Life and contribution
திரு. கிரிதரன் அவர்களின் இயக்கத்தில் மலர்ந்த
சுவாமி தட்சிணாமூர்த்தி அவர்களின் வாழ்வும் வாக்கும்
இசை நாடகம் – ஓரு மீள்பார்வை

அழகாக திட்டமிட்டு தீட்டப்பட்ட காவியம்
ஆன்மீக அன்பர்களுக்கு இது ஒரு சொல் ஓவியம்
இசை ரசிகர்களுக்கு இனியதொரு வரப்பிரசாதம்
“ஈஸ்வரன் அருள்தான் எல்லாம்“ என்ற உன்னத எண்ணம் கொண்ட
உயர் பெரியவர் சுவாமிகளின் இசை வாழ்வு ஓர் அற்புத வரலாறு
ஊர் உலகம் அனைத்திலும் இவர் புகழ் பரவ வேண்டும்
எளிய நாடக அரங்க அமைப்பும் ஒரு சாதனை
ஏற்ற இற(ர)க்கம் நிறைந்த வசன உச்சரிப்போ – ஒரு நல்ல போதனை
ஐயமேயில்லை – “வைக்கம் தாதா அன்னதான பிரபோ கோஷம்“ இ(எ)ன்றும் நம் செவியில்
ஒன்று மட்டும் உறுதி – சுவாமியின் வாழ்க்கை ஒரு சரித்திர இசைப் பயணம்
ஓங்கார நாதம் அவர் மூச்சில் – பேச்சில் – பாட்டில்
ஔடதம் இப்பிறவிக்கு சுவாமி தட்சிணாமூர்த்தி அவர்களின் பாடல் என்பது
ஆன்மீக அன்பர்களின் மெய்யான கூற்று!!!!
முனைவர். வே. வெ. மீனாட்சி