அன்னபூரணி

Annapoorani

அன்னபூரணி யின் அழகே.. அழகு..

ஆதி சிவனுக்கு அன்னமிட்ட கையழகி

இவ்வுலக நாதனின் தேவியவள்

ஈகைக்கு எடுத்துக்காட்டவள்

உண்டி கொடுத்தோரை உயிர் கொடுப்போர் ஆக்குபவள்

ஊன்உடலுக்கு உறுதுணையானவள்

என்றும் என்றென்றும் நம் அன்னையவள்

ஏழு ஜென்ம பாவம் தீர்க்கும் தங்க அன்னபூரணி தரிசனம்

ஐங்கரன் துண்டி விநாயகர் தாயவள்

ஒரு விசாலாக்ஷியாகவும் வடிவெடுத்தவள்

ஓராறு முகனின் தாயுமானவள்

ஔவை தெய்வம் வடிவில் வந்த காஞ்சி மஹா பெரியவர் அருள் நம்மை என்றும் காக்கட்டும்.

Prof. V. V. Meenakshi Jayakumar

நவராத்திரி

நவராத்திரி

navarathiri

அம்பிக்கை தாயே ஆண்டருள்வாயே

இன்னல் போக்கியே எம்மை காத்தருள்வாயே

ஆதி சக்தியே ஜோதி சக்தியே

ஆடிப் பாடுவோம் வந்தருள்வாயே!

 

கோலம் வரைந்தோம், கொலுப்படி அமைத்தோம்

கோடி ஜென்ம பாவம் தீர விரதமும் இருந்தோம்

ஓடி நீ வருவாய், எம்மைத் தேடி வருவாய்

நாடியே வந்து நலம் பல புரிவாய்!

 

தீமையை அழிக்கும் துர்க்கையும் நீயே

செல்வமும் அளிக்கும் லட்சுமியும் நீயே

கல்வியை அளிக்கும் சரஸ்வதி நீயே

ஆதி சக்தியே எம்மைக் காத்தருள்வாய்!

 

கன்னி பூஜை செய்தோம் ஏற்றருள்வாயே

கடைக்கண்ணால் நீ எம்மை காத்தருள்வாயே

விஜயதசமியில் பயிலத் தொடங்கினோம்

வித்தையை அளிப்பாய் வெற்றியும் தருவாய்!

Prof. V. V. Meenakshi Jayakumar

கண்ணன் பிறந்த நாள் விழா

கண்ணன் பிறந்த நாள் விழா

kannan

அஷ்டமி நாள் பார்த்து அவதரித்தான் கண்ணன்…..

ஆதி நாராயணனே இங்கு வந்தான்.

இசைக்குழல் கொண்டு வந்தான்.

ஈடில்லா நாதம் தந்தான்..

உலகினில் உத்தம காதலனாக நின்றான்

ஊர்கோடி யமுனையில் கோபியர் தாபம் தீர்த்தான்

எண்குணம் படைத்தவன் துவாரகையில் அமர்ந்தான்

ஏழுலகை வென்று .. அவன் வேப்பமரமாகியுள்ளான்…..

ஐயமற கீதை சொன்னான்..அதர்மத்தை அழிக்க..

ஒன்றே பரம் என்றே நின்றான்  விட்டலன் ஆனான்

ஓசைஒலி எல்லாம் அவனே…கண்ணன் என்பவன்..

ஔவை தெய்வமாம் முருகன் மாமனவன்

காஞ்சி மஹா பெரியவர் கருத்தில் நின்றவன்

காஞ்சி மஹா பெரியவர் கருத்தில் நின்றவன்

அவரின்  தெய்வத்தின் குரலாய் என்றும் எழுத்தில் நிற்பவன்.. கண்ணன்…

Prof. V. V. Meenakshi Jayakumar

விநாயகா

விநாயகா

vinayaga

எடுப்பு

எனையாள உடனே நீ வா விநாயகா

எனையாள உடனே நீ வா

 

தொடுப்பு

உமையவள் மைந்தனே ஓங்கு புகழ் பெற்றவனே

எமைக்காத்து அருளவே வேலுடன் நீயும் வருவாயே

 

முடிப்பு

இமையோர்கள் நாயகனே ஏனிந்த ஏற்றத்தாழ்வு

அமைதியின் வடிவனே சாந்த சொரூபனே

தமைச்சேர்ந்த அடியவர்தம் வினைத் தீர்க்கும் – விநாயகனே

சமையலில் நேர்த்தியும் சுவையும் தந்தருள்வாயே

 

உன்னை நம்பும் எனைக் காத்து

அருள்வாயே ஆண்டவனே

புன்னை மர தரு நிழலில் உள்ள

பன்னக சயனனே

தன்மையில் நானும் ஒரு சூரபத்மன் தானே

கண்மணி எனை நீ காத்து அருள்வாயே

கன்னம் அழகு கொண்ட லஷ்மியின் நாயகனே

இன்னும் ஒரு பிறவி இல்லாமல் அருள்வாயே

இன்னும் ஒரு பிறவி இல்லாமல் அருள்வாயே

Prof. V. V. Meenakshi Jayakumar

பத்மநாபா

பத்மநாபா

padmanabha

பாஹி பாஹி பத்மநாபா

பாஞ்சாலி மானம் காத்தவனே

பார்வதி சோதரனே பத்மநாபா

பார்த்திபன் சோகம் தீர்த்தவனே

சார்வபௌமனே பத்மநாபா

சாரங்கபாணியே பத்மநாபா

கார்மேக வண்ணனே பத்மநாபா

சீர் மேவும் சக்ரபாணி பத்மநாபா

பாஹி பாஹி பத்மநாபா

பாஞ்சாலி மானம் காத்தவனே

Prof. V. V. Meenakshi Jayakumar

ராமர்

ராமர்

ramar

அயோத்தி அரசன் தசரதனாம்

ஆம் இவன் மிகவும் நல்லவனாம்

இராணியர் மூவர் இருந்தாலும்

ஈண்டு இன்னும் குழந்தை இல்லை

உண்மைத் துறவி ரிஷ்யசிங்கர்

ஊர்  போற்ற புத்ர யாகம் செய்தாரே

எண்ணியது அருளும் பாயாசமும்

ஏற்ற இராணியர் பருகினரே

ஐயன் நாரணன் இராமனாயும்

ஒப்பில்லா பரதனும் லட்சுமணனும்

ஓங்கு புகழ் கொண்ட சத்ருகனும்

ஔஷதம் போலே வந்துதித்தனர்

Prof. V. V. Meenakshi Jayakumar

Karthikeyan

கார்த்திகேயன்

karthikeyan

கங்கையின் புதல்வன் கார்த்திகேயன்

மங்கையர் வணங்கிய  வள்ளி மணாளன்

பங்கையர் கண்ணி தேவானை நாயகன்

சங்கையர் நாதன் வடிவில் உள்ளோன்

 

எங்களின் குலதெய்வம் முருகப் பெருமான்

உங்களின் துயர் நீக்கும் கருணைக்கடவுள்

திங்களின் மேனி உடைய வள்ளியின்

பங்கினில் உறையும் பரம குருநாதன்

 

அங்கையில் வேல்கொண்டு ஆடும் முருகன்

எங்கேயும் எங்களை காக்கும் தெய்வம்

மங்கையரின் புகழ் கீர்த்தி வாய்ந்த

ஓங்கு புகழ் பாடும் அருணகிரிநாதர்

Prof. V. V. Meenakshi Jayakumar

போற்றி ஓம் நமச்சிவாய

போற்றி ஓம் நமச்சிவாய

 Shiva

போற்றி ஓம் நமச்சிவாய

புயங்கனே மயங்கு கின்றேன்

போற்றி ஓம் நமச்சிவாய

புகல் இடம் பிறிது ஒன்று இல்லை

போற்றி ஓம் நமச்சிவாய

புரம் எனைப் போக்கல் கண்டாய்

போற்றி ஓம் நமச்சிவாய

சய சய போற்றி போற்றி

ஒருவனே போற்றி ஒப்பு இல் அப்பனே போற்றி

குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி

வருக என்று என்னை நின் பால்

வாங்கிட வேண்டும் போற்றி

தருக நின் பாதம் போற்றி

தமியனேன் தனிமை தீர்ந்து

Prof. V. V. Meenakshi Jayakumar

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

Murugar

பாப்பா பாப்பா சொல்லு பாப்பா (2)

கந்தா குமரா என்றே சொல்லு பாப்பா

இப்போ அப்போ எப்போதும் சொல்லு பாப்பா

கார்த்திகை குமரன்பேர் சொல்லு பாப்பா

நில்லு பாப்பா நீ நில்லு பாப்பா

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

 

கந்தா குமரா என்று நீ சொல்லு பாப்பா

அல்லும் பகலும் சொல்லு பாப்பா

வள்ளி மணாளன் பெயர் நீ சொல்லு பாப்பா

நில்லு பாப்பா நீ நில்லு பாப்பா

 

நித்தமும் அவன் புகழ்  பாடு பாப்பா

நல்லதெல்லாம் தானே வரும் நம்பு பாப்பா

நீதி நெறியின் பக்கம் நில்லு பாப்பா

 

பாரு பாப்பா நீ பாரு பாப்பா

பாங்கான முருகனை  பாரு பாப்பா

ஆறு முகன் அவனே தெய்வம் நம்பு பாப்பா

ஆவினன் குடி வந்து பாரு பாப்பா

 

ஓடு பாப்பா நீ ஓடு பாப்பா

ஓங்கார பரமன் அடி தேடி ஓடு பாப்பா

ஆடு பாப்பா நீ ஆடு பாப்பா

ஆடும் மயில் சோலை வந்து ஆடு பாப்பா

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

முருகன் என் தெய்வம் என்று சொல்லு பாப்பா

 

கல்லு பாப்பா நீ கல்லு பாப்பா

கருணை இல்லா உள்ளம் கொண்டால் கல்லு பாப்பா

வெல்லு பாப்பா நீ வெல்லு பாப்பா

வேலுண்டு வினையில்லை வெல்லு பாப்பா

வேண்டாத காமத்தை கொல்லு பாப்பா

வேலன் திருவடி கதியென நில்லு பாப்பா

 

முனைவர். வே. வெ. மீனாட்சி ஜெயக்குமார்

முருகன்

முருகன்

kili murugan

கிளியே  கிளியே  அருகில் வா

கிளர்ச்சி  பொங்க  அருகில் வா

கிளியே கிளியே  நீ பாடு

கிள்ளைத் தமிழில்  நீ பாடு

முருகா குமரா  என்றே நீ

உருகி மருகி   நீ பாடு

கந்தா கடம்பா  என்றே நீ

மந்தாகினி  போல  நீ பாடு

வள்ளி கணவன்  அவன் பெயரை

துள்ளி துள்ளி  நீ பாடு

தெய்வானை மணாளன்  அவன் பெயரை

தாய்ப்பாசம் பொங்கிட நீ பாடு

அன்பே அருளே அவன் வடிவம்

அருளும் பொருளும் அவன் தருவான்

பண்கொண்டு பாமாலை  நீ பாடு

பண்ணார் மொழியில் நீ பாடு

கிளியே கிளியே அருகில் வா

Prof. V. V. Meenakshi Jayakumar