அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

எடுப்பு

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் எதற்கும் அஞ்ச மாட்டேன்

தொடுப்பு

கொஞ்சி பேசும் வள்ளி மணாளன் முருகனிடம்

தஞ்சமென்று சேர்ந்து விட்டேன் நான் – எனவே

முடிப்பு

பஞ்சு போல் பறந்திடும் பாவங்கள் எல்லாம்

எஞ்சி இருப்பது பண்ணிய புண்ணியங்கள் தானே

காஞ்சி வாழ் மஹா பெரியவா அருள் உண்டு என்றும்

வாஞ்சையுடனே அவர் உடன் காப்பார் எனவே

 – அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

Prof. V. V. Meenakshi Jayakumar

மனம் உருகுதையா

மனம் உருகுதையா

எடுப்பு

மனம் உருகுதையா – உன் பெயர் கேட்டாலே – என் மனம் உருகுதையா

தொடுப்பு

வனம் செல்ல தேவையில்லை – உனை துதிக்க

மனம் அதை அடக்கினாலே போதும் – என்

முடிப்பு

இனம் அதை நாடாமல் – அலையும் மனமே

கனம் பொருளும் தானே வரும் – உன் பெயர் துதித்தால் போதுமே

சனமும் புகழும் தன்னாலே தேடி வரும் உன் பெயர் துதித்தால் போதுமே

தனமும் அழகும் தானே வரும் – உன் பெயர் துதித்தால் போதுமே

    Prof. V. V. Meenakshi Jayakumar

தெய்வத் தமிழ் மொழி

தெய்வத் தமிழ் மொழி

tamil

அருமைத் தமிழ் மொழி

ஆன்மீகத்தின் அருள்மொழி

இயல் இசை நாடகம் கொண்ட மொழி

உயர்ந்த தமிழ் இது

ஊமையையும் பேச வைக்கும்

எண்ணெழுத்துக் கொண்டது

ஏற்றமளிப்பது

ஐங்கரன் தம்பி மொழி

ஒப்பில்லாத தமிழ்

ஓங்குமிசை கொண்ட தமிழ்

ஔவை தெய்வமாம் முருகன் பெயர் கொண்ட மஹா பெரியவா தெய்வத்தின் குரலாய் ஒலித்த மொழி..

தமிழே..   தமிழே..    அன்னையே.

உன்னை வணங்கி வாழ்த்துகிறேன்..

எங்கள் எண்ணத்திலும்,

நாவிலும் செயலிலும் வந்து வாழ்வருள்..

Prof. V. V. Meenakshi Jayakumar

தீபம்

 தீபம்

deepam

அழகு தீபம் ஏற்றி போற்றுவோம்

ஆன்மீக தீபம் ஏற்றி போற்றுவோம்

இல்லம் தோறும் அல்லல் தீர நல் தீபம் ஏற்றுவோம்

ஈசன் முழு வடிவான  தீபம் ஏற்றுவோம்

உயர்ந்து ஒளிவீசும் தீபம் ஏற்றுவோம்

ஊக்கமுடன் உற்சாக தீபம் ஏற்றுவோம்

எண்ணத்தில் அன்பெனும் தீபம் ஏற்றுவோம்

ஏற்றம் பெற்று நன்கு வாழ தீபம் ஏற்றுவோம்

ஐயன் அண்ணாமலையானுக்கு தீபம் ஏற்றுவோம்

ஒரு பதினோரு முறை அண்ணாமலையானுக்கு அரோகரா என்றோதி தீபம் ஏற்றுவோம்

ஓம் தீப மங்கள ஜோதி பாடி தீபம் ஏற்றுவோம்

ஔவை தெய்வம் வடிவில் வந்த காஞ்சி மஹா பெரியவர் சொன்னபடி அன்றாடம் தீபம் ஏற்றி தேவாரம் பாடுவோம்.

   Prof. V. V. Meenakshi Jayakumar

அனுமன்

அனுமன்

hanuman

அஞ்சனை மைந்தன் அனுமன் அவன்

ஆதி சிவனின் அம்சமவன்

இந்துஸ்தானி இசையின் தந்தை அவன்

ஈரெழுத்து மந்திரத்தின் சொந்தமவன்

உண்மை பிரம்மசாரியவன்

ஊதிய தாடை கொண்டவனாம்

எதிலும் எங்கும் இராமனையே

எப்போதும் காணும் கண் கொண்டவன்

ஏழு பிறப்பில்லா சிரஞ்சீவி அவன்

ஐயன் இராமனே அவன் கடவுள்

ஒருமுகப்பெற்ற உள்ளம் கொண்டவன்

ஓங்கி பறக்கும் கொடியில் இருப்பவன்

ஔவை தெய்வமாம் பிள்ளையாருடன்

ஆதிஅந்த பெருமாளாய் அருள்புரிபவன்

காஞ்சி மஹா பெரியவா கண்டுரைத்த மடத்தின் எதிர் தூணில் ஆசி அருள்பவர்  ஜெய் அனுமான்

Prof. V. V. Meenakshi Jayakumar

நதி

நதி

nadi river image

காட்டோரம் ஒரு நதி

காடுகாக்கும் நல்ல நதி

காடுபாக்க போகையிலே

காடுபாக்க போகையிலே – இந்த

காதற் பாட்டு வந்துடுச்சி

தன்னானானனானே தன தன்னானானனானே

காசு பணம் வேணாமின்னு

காதோரம் சேதி சொல்லி

கால் நடையா நடந்து வந்தேன்

கால் நடையா நடந்து வந்தேன் – நான்

காதல் நதியே உன்னைத் தேடி

தன்னானானனானே தன தன்னானானனானே

காலை மாலை இரண்டு வேளை

காவற்காக்கும் சூரியனே

காக்க வரும் சாமி நீயே

காலமெல்லாம் நல்லா வாழ

ஆசி ஒன்னு சொல்லு நீ

ஆறுதலா நில்லு

Prof. V. V. Meenakshi Jayakumar

கிளி

கிளி

Kili

ஆத்தோரம் ஆலமரம்

அதிலேவொரு நடு கிளை

அங்கவொரு கிளிக் குஞ்சு

அழகு கொஞ்சும் சின்னக் கிளி

அந்த கிளி பறந்து பறந்து

அம்மன் மேல அமர போகும்

அந்த கிளியாக நானிருக்க

அம்மா எனக்கு வரங்கொடு

  Prof. V. V. Meenakshi Jayakumar

கண்ணன்

கண்ணன்

kannan flute

கண்ணன் கையில் குழலாவேன் – நான்

கண்ணன் கையில் குழலாவேன் – என்

எண்ணங்கள் அனைத்தையும் அவனிடம் தந்து

குழலைப் போல் நான் உள்ளொன்றும் கொள்ளேன்

 

மண்ணைத் தின்று உலகம் படைப்பான் – என்

மனதைத் தின்று உவகை கொள்வான்

பண் கொண்டு பாடும் எந்தன் குரலில்

தேனாய் வந்து இனிமை கொடுப்பான்

 

விண்ணையும் மண்ணையும் காலால் அளப்பான்

வீணையில் இசையாய் என் வசம் வருவான்

அண்டமும் பிண்டமும் அவனே என்ற

உண்மையை எனக்கு அனுதினம் உரைப்பான்

Prof. V. V. Meenakshi Jayakumar

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

Corona

ஆடுவோமே பள்ளு பாடுவோமே      

பல்லவி

ஆடுவோமே பள்ளு பாடுவோமே – நாம்

அனைவரும் தடுப்பூசி போட்டு விட்டோம் என்று – ஆடுவோமே

அனுபல்லவி

எங்கும் கொரோனா என்பதே பேச்சு – நாம்

எல்லோரும் பயப்பட வேண்டியதாச்சு

தடுப்பூசி என்பது தடுப்பதற்கே அது போல்

முகக்கவசம் கூட அவசியமே..

சரணம்

முகச் சுத்தம் கைச் சுத்தம் பேணிக் காப்போம் – நாம் (2)

அடிக்கடி கைகளை சுத்தம் செய்வோம்

கூட்டமுள்ள இடங்களுக்கு செல்ல மாட்டோம்

தேவையின்றி வெளியில் வர மாட்டோம்

 

நாமிருக்கும் இடத்தை சுத்தமாய் வைப்போம்

அதைப் போல் மற்றவருக்கும் உதவிடுவோம்

தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்போம்

கொரோனா இல்லாத தேசத்தில் வாழ்ந்து காட்டுவோம்

Prof. V. V. Meenakshi Jayakumar

 

அன்னாபிஷேகம்

annabhishegam

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் கண்டவர் கலி தீரும்

ஆண்டவன் நமக்கு அருள் தரும் நாள்

இந்த நாளில் இந்த அன்ன கோலத்தில்

ஈசனைக் கண்டால்

உண்மை பொருள் சேரும்

ஊழ்வினை அகலும்

எண்ணியதெல்லாம்

ஏற்றபடி நடக்கும்

ஐங்கரன் தந்தை நம்மை என்றும் காப்பான்

ஒரு நூறு ஜென்ம பாவம்

ஓடியே போகும்

ஔடதமே இப்பிறவி பிணிக்கு அன்னாபிஷேகமே..

காஞ்சி மஹா பெரியவர் அருள் என்றென்றும் நமக்கு இருக்கட்டும்.

Prof. V. V. Meenakshi Jayakumar